April 23, 2026

தற்போதைய செய்திகள்

அமைச்சர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்.
அமைச்சர் ராமச்சந்திரன் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய டில்லி உயர் நீதிமன்றம்.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான மனுக்களுக்கு எப்போது முடிவு எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷனிடம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.
டில்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் ஏஐ மாநாடு துவங்கியது. உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இஸ்ரேல் பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி.
பிப்ரவரி 25–26ல் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள்...
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய மணிசங்கர் அய்யர்.
இண்டி கூட்டணிக்கு தலைவராக ஸ்டாலின் தகுதியானவர் என மணிசங்கர் அய்யர் கூறிய நிலையில், அவரது கருத்தை சச்சின் பைலட் மறுத்தார்.
சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் அண்ணாமலை.
டிஆர்பாலுவிடம் 3 மணி நேர குறுக்கு விசாரணை நடைபெற்றதாக தெரிவித்த அண்ணாமலை, புதிய அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூறினார்.
திரிஷா சர்ச்சை குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும் நயினார் நாகேந்திரன்.
திரிஷா தொடர்பான கருத்து சர்ச்சையாகிய நிலையில், அது “தவறி வந்த வார்த்தை” என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்தார்.
டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.