பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ஈரானுக்கு கடும் நடவடிக்கை: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் Donald Trump எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய Donald Trump, “ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம். அதற்கு முன்பாக ஈரான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்றார்.
மேலும், “பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அமெரிக்கா புதிய தாக்குதல்களை தொடங்கக்கூடும். கட்டாயமாக ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
“ஈரான் விவகாரத்தில் தற்போது நாம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலைமை முடிவடையலாம் அல்லது மேலும் மோசமடையலாம். நாங்கள் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் வரலாம். ஆனால் அது நடக்காது என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் முடிக்கிறோமா அல்லது அவர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுகிறார்களா என்பதே தற்போது உள்ள முக்கிய கேள்வி” என Donald Trump கூறினார்.
அதேபோல், “இந்த விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் Benjamin Netanyahu செய்வார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது மோதலை மேலும் விரிவுபடுத்தி பேரழிவை ஏற்படுத்தும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
