சிஜேபி இயக்கத்தினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நேற்று மதியம் முதல் சிஜேபி இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கு அரசு நான்கு முறை அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க, இயக்கத்தினர் விரும்பும் இடத்திலும், அவர்களுக்கு ஏற்ற நேரத்திலும் ஆலோசனை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஜே.பி. நட்டாவின் அலுவலகம் அல்லது இல்லம் உள்ளிட்ட எந்த இடத்திலும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும், இதில் மரியாதை அல்லது இடம் குறித்த எந்த நிபந்தனையும் அரசுக்கு இல்லை என்றும் அவர் விளக்கினார்.
இந்த ஆலோசனையில் ஜே.பி. நட்டாவும், தானும் நேரடியாக பங்கேற்று, பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்து தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
