திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பதவியேற்ற உடனேயே V. D. Satheesan பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை மையமாகக் கொண்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் முக்கியமாக, கேரளா முழுவதும் பணிபுரியும் பெண்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில், வரும் ஜூன் 15 முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் நலனுக்காக தனி சிறப்பு துறை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல், மாநில சுகாதார அமைப்பில் முக்கிய பங்காற்றி வரும் ஆஷா பணியாளர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1,000 சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளி சமையல்காரர்கள் மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் கூடுதலாக ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் வி.டி சதீசன் உறுதி அளித்துள்ளார்.
