இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்: அமெரிக்காவிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
S. Jaishankar, இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என Marco Rubioவிடம் வலியுறுத்தியுள்ளார்.
New Delhiயில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள், வர்த்தகம், குடியேற்ற கொள்கைகள் மற்றும் விசா நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்துள்ள Quadrilateral Security Dialogue அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “இந்தியா – அமெரிக்கா உறவின் மையமாக மக்கள் இடையேயான தொடர்புகள்தான் உள்ளன. எனவே, இந்தியர்கள் அமெரிக்காவுக்கு எளிதாக சென்று வரக்கூடிய வகையில் விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.
மேலும், “விசா வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் சிக்கல்கள் குறித்து அமெரிக்க தரப்பிடம் கவலை தெரிவித்துள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரூபியோ உறுதியளித்துள்ளார்,” என்றும் கூறினார்.
அதே நேரத்தில், “அமெரிக்கா தனது வெளியுறவு கொள்கையில் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற அணுகுமுறையை பின்பற்றினால், இந்தியாவும் ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையிலேயே செயல்படும்,” என ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், ஆனால் புதிய குடியேற்ற கொள்கைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் தகுதி வாய்ந்த இந்தியர்களை பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, Donald Trump நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. மேலும், ‘கிரீன் கார்டு’ மற்றும் H-1B visa விசா நடைமுறைகளிலும் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மத்தியில் கவலை உருவாகியிருந்தது.
இதுகுறித்து பேசிய மார்கோ ரூபியோ, “அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. இந்தியர்கள் அமெரிக்காவில் 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்,” என்றார்.
மேலும், “அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கைகள் இந்தியர்களை குறிவைத்து உருவாக்கப்படவில்லை. அவை தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டவை,” என்றும் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் மார்கோ ரூபியோ கூறினார்.
