சென்னை: அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரத்தின் பின்னணியில், Abhishek Manu Singhvi முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ஆம் தேதி வெளியான நிலையில், Tamilaga Vettri Kazhagam 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதையடுத்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான Rahul Gandhi, அபிஷேக் மனு சிங்வியை உடனடியாக சென்னை அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவரது ஆலோசனையின் பேரிலேயே Viduthalai Chiruthaigal Katchi, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் Vijay ஆட்சியை அமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என கவர்னர் Rajendra Arlekar தெரிவித்த நிலையில், “யாருக்கும் முழு பெரும்பான்மை இல்லாத சூழலில் அதிக இடங்களில் வென்ற கட்சியையே முதலில் அழைக்க வேண்டும்” என்று அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் தவெக அரசு வலுப்பெற்றதோடு, திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்காலத்தில் நெருக்கடி கொடுக்கக்கூடும் என்பதால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தவெக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, 118 எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை கடந்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை அசைக்க முடியாது என்று அபிஷேக் மனு சிங்வி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், அதிமுக மட்டுமின்றி Dravida Munnetra Kazhagam மற்றும் Pattali Makkal Katchi வட்டாரங்களிலும் அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
