டெல் அவிவ்: உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் இஸ்ரேலுக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளனர் என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.
மேற்கு கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் பல நாடுகளில் இஸ்ரேலுக்கான அங்கீகாரம் மற்றும் ஆதரவு தொடர்பாக பல்வேறு சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “உலகின் பல நாடுகளை விட இந்தியாவில் தான் எங்கள் நாட்டிற்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளனர் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் எங்களுக்கு உண்மையான மற்றும் வலுவான ஆதரவு உள்ளது” என்று நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேலைப் பற்றி இந்தியாவை பாராட்டி நெதன்யாகு கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு இந்திய பயணத்தை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவில் தமக்கு கிடைத்த வரவேற்பை குறித்து பெருமிதத்துடன் பேசியிருந்தார்.
அப்போது, உலகின் பல பகுதிகளில் இஸ்ரேலுக்கு மரியாதை கிடைத்தாலும், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட Indiaவில் இஸ்ரேலுக்கு தனிப்பட்ட வரவேற்பும் ஆதரவும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், அன்றைய பயணத்தின் போது இந்திய பிரதமர் Narendra Modi தன்னை அன்புடன் வரவேற்றதாகவும், தனது மனைவியுடன் மேற்கொண்ட இந்திய பயணம் ஒரு “அன்பின் திருவிழா” போன்று இருந்ததாகவும் நெதன்யாகு கூறியிருந்தார்.
