சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றம் நீடித்தால், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விலை உயர்வு இந்தியாவின் பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி செலவு மற்றும் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றாமல் வைத்திருக்க அரசால் முடியாது என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
மேலும், தற்போதைய மோதல் சூழ்நிலை காரணமாக கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுசெய்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், அந்நியச் செலாவணிக் கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் Narendra Modi ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னரின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
