டேராடூன்: 2026ம் ஆண்டில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட பின்னர் அவர் பேசியதாவது:
இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ள சுமார் 200 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நான் குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவை கொண்டு வந்தபோது காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, மம்தா மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் அதை எதிர்த்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து அகதிகளுக்கு உரிமை உண்டு.
திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. ராகுல், மம்தா மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்தாலும் சிஏஏ சட்டத்தின் கீழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
2026ம் ஆண்டில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். 2027ம் ஆண்டில் உத்தராகண்டில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்.
“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற கனவை நனவாக்கும் வகையில் ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஹிந்து அகதிகளுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அடிமைத்தன மனநிலையுடன் கூடிய அடக்குமுறை பிரிட்டிஷ் சட்டங்களை நீக்குவதே நோக்கம். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் தண்டனை அல்ல, நீதியே முக்கியம் என்ற இந்திய நெறிமுறைகளுக்கு ஏற்ப நீதித்துறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.
