சென்னை: சட்டசபையில் இன்று சட்டம் ஒழுங்கு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசினார். அப்போது திமுகவின் அரசியல் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த அவர், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியலில் அவதூறு, வன்மம் மற்றும் அசிங்கமான பேச்சுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று கூறிய விஜய், கடந்த கால அரசியலில் இருந்த நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
திமுக குறித்து கவிஞர் கண்ணதாசன் கூறியதாக, “பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை” என்ற வரிகளை குறிப்பிட்ட விஜய், இதுதான் திமுக என விமர்சித்தார்.
மேலும், தனது அரசுக்கு தனிப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை என்றும், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதே அரசின் அடையாளம் என்றும் தெரிவித்தார். தமிழகம் தனது வீடு என்றும், 8 கோடி மக்களும் தனது சொந்தம் என்றும் கூறினார்.
மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொடமாட்டோம் என்றும், அதைத் தொடுபவர்களையும் விடமாட்டோம் என்றும் விஜய் தெரிவித்தார்.
