புதுடில்லி: தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக டில்லி சென்ற Vijay, பிரதமர் Narendra Modiயை சந்தித்து தமிழக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை மனு வழங்கினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற பிறகு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பது வழக்கமான மரபாக உள்ள நிலையில், விஜயின் டில்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இரு நாள் பயணமாக நேற்று டில்லி சென்ற முதல்வர் விஜய், விமான நிலையத்திலிருந்து நேராக சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு தமிழக அரசின் தலைமை செயலர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
பிரதமரை சந்திப்பதற்கு முன், தமிழக நலத்திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கமளித்தனர். தொடர்ந்து பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ சென்ற விஜய், மாலை 4:20 மணி முதல் 4:41 மணி வரை பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பரந்தூர் விமான நிலைய திட்டம், பி.எம். ஸ்ரீ திட்டம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharamanயையும் விஜய் சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஜிஎஸ்டி பகிர்வு நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சமக்ரா சிக்ஷா அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்து விரிவாக விளக்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் Amit Shahவை சந்திக்கும் திட்டமும் இருந்ததாக கூறப்பட்டாலும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக அந்த சந்திப்பு நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பிரதமர் மோடியை சந்திக்க எடுத்துச் சென்ற கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய் தனியாக கையில் எடுத்துச் சென்றது கவனத்தை ஈர்த்தது. மேலும், அவரது டில்லி பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு இல்லத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காங்கிரஸ் தலைவர் Mallikarjun Kharge, Sonia Gandhi மற்றும் Rahul Gandhi உள்ளிட்ட தலைவர்களையும் இன்று சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2014ஆம் ஆண்டு கோவையில் பிரதமர் மோடியை சந்தித்ததை இருவரும் இந்த சந்திப்பில் நினைவுகூர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
