சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. பின்னர், வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதனை எதிர்த்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி கே. ராஜசேகர் விசாரித்தார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேரின் ஜாமினை ரத்து செய்து, மார்ச் 6ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதேவேளை, அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோரின் ஜாமினை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் அருணுக்கு ஜாமின் வழங்கினார்.
